எதிரிகளால் பிரச்சினை

Update: 2024-02-19 18:30 GMT

2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கையில் எடுக்கும் காரியங்களில் ஒருபுறம் தடை, இன்னொரு புறம் நடப்பது போன்ற சூழல் என இரண்டுமே இருக்கும். இருப்பினும் சுமாரான பலன்கள் கிடைக்கும். வருமானங்களில் பிரச்சினை இல்லை. புதிய முயற்சிகள் எடுக்க வாய்ப்பில்லை. யாருடைய விஷயத்திலும் தலையிட வேண்டாம். அதே நேரம் யாரையும் முழுமையாக நம்பவும் வேண்டாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்களது எதிரிகளால் பிரச்சினை ஏற்படும். அதனால் எதிரிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. அதேபோன்று வீட்டு வேலையாட்களிடமும் கவனமாக இருங்கள். சொந்த தொழிலில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் பெரிய அளவில் முதலீடு செய்யும்போது கவனமுடன் இருங்கள். காதல் வெற்றியடையும். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வந்து சேரும். துர்க்கை மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்