எதிரிகளால் தொல்லை

Update: 2024-02-26 18:30 GMT

2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலைவாய்ப்பு சிறப்பாக உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்கள் எதிரிகளிடம் இருந்து தொல்லை அதிகரித்துக்கொண்டே இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்கள் பணம், பொருள் முடங்கிக்கொள்ளும் காலம். சொந்த தொழிலும் சுமாராகத்தான் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும், குறிப்பாக அப்பாவின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். ஆராய்ச்சி படிப்பில் டாக்ட்ரேட் வாங்க நினைப்பவர்கள் படிப்பை தொடரலாம். வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். எந்த துறையில் பணியாற்றினாலும் திருப்தியான மனநிலையில் இருக்க மாட்டீர்கள். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் தேவையற்ற செலவினங்கள், பிரச்சினைகள் ஏற்படும். பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பை தரும்.  

Tags:    

மேலும் செய்திகள்