அபிலாஷைகள் பூர்த்தியாகும்

Update: 2024-08-26 18:30 GMT

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட், டூர் ஆகியவை இருக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் இந்த வாரத்தில் உள்ளது. குழந்தைக்காக சிகிச்சை எடுத்தால் அதுவும் வெற்றியடையும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருந்தால் புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் சாதகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எந்த அளவுக்கு உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சின்ன சின்ன தடைகள் இருந்தாலும், இறுதியான வெற்றி உங்களுக்குத்தான். கெரியரை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யலாம். உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்