தெய்வ அனுகூலம் கிடைக்கும்

Update: 2024-04-15 18:30 GMT

2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய ஆசைகள் பூர்த்தியாகும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார நிலைகள் நன்றாக இருந்தாலும், வருமானங்கள் இருந்தாலும் செலவினங்களும் இருக்கும். முதலீடுகள் செய்தால் நல்லது. புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். உறவுகளால் மனவருத்தங்கள், சகோதர - சகோதரிகளால் நிம்மதியற்ற சூழ்நிலைகள் இருக்கிறது. வீடு, இடம் மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். இந்த வாரம் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். அது மிக முக்கியம். காரணம் உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. அவர்களால் ஆக வேண்டிய காரியங்கள் கை கூடி வரும். உங்கள் விருப்பத்துக்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய கால கட்டமாக இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் செய்ய வேண்டாம். துர்க்கை மற்றும் மகாலட்சுமியை வழிபட்டால் ஏற்றம் காணலாம்.    

Tags:    

மேலும் செய்திகள்