உறவுகளிடம் கவனம்
2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உள்ளன. உங்கள் தொழில் பெரிய அளவில் லாபத்தை, வருமானத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இருவருமே லாபத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்றாக உள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பண சுழற்சி நன்றாக உள்ளது. முயற்சிகள் எதுவும் பெரிதாக செய்ய வேண்டாம். உறவுகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஏனென்றால் உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், போராட்டங்கள் இருக்கிறது. புதிய காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் உண்டாகும். உங்களின் அந்தஸ்த்து, புகழ் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்ளுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ், லாபம், வருமானங்கள் இருக்கிறது. விவசாயத்தில் லாபம், மகசூல் உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.