2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனம் தேவை. லோன் போட்டு இடம், மனை, வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதுகுறித்த பேச்சுவார்த்தைகள், திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கும் நடக்கும். உங்கள் தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் கிடையாது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்றாக உள்ளது. லோன் அல்லது கடன் வாங்கி தொழில் நிறுவனம் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் முயற்சிகள், எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நினைப்பது அனைத்தும் நடக்கும். எல்லாவிதமான விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story