2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு ஏதோவொரு வகையில் கூடும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டு. ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. பேச்சின் மூலமாக வருமானங்கள் கூடும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் காதல் வெற்றி அடைய வாய்ப்புகள் இல்லை. பிரேக் அப் ஆக வாய்ப்புள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பாராத தெய்வ, ஆலய தரிசனம் ஏற்படும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில், நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ், அரியர்ஸ் அத்தனையும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. முதலீட்டை பார்த்து செய்யுங்கள். பின்னாளில் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
