2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்கள் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடமாற்றங்கள் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்பு அல்லது அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிசினஸ் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். கல்வி நன்றாக உள்ளது. அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். வேலை, வாய்ப்புகளில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் ஆகியவை உண்டு. வழக்குகள் இருந்தால் அந்த வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு, ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் உண்டு. தேவையில்லாதவற்றில் தலையிடாதீர்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் அடக்கி வாசியுங்கள். இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 11 March 2025 9:28 AM IST
ராணி

ராணி

Next Story