2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இதுவரை இருந்த குழப்பம் நீங்கும். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. நீங்கள் நினைப்பது நடக்கும். நம்பியவர்களால் நற்பலன்கள் கிடைக்கும். தேடுதல் என்பது பெரிய அளவில் இருக்கும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பயணம் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள், செயல்பாடுகள் வெற்றியடையும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள், வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் விற்பனையாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். விவசாய துறைகளில் மகசூல் மற்றும் லாபம் இருக்கும். புதிய காதல் மலரும். பழைய காதல் திருமணத்தில் முடியும். முதலீடுகளில் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். தொழில் சுமாராக இருக்கும். வேலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. சிவன் மற்றும் விநாயகர் வழிபாடு நல்ல ஏற்றத்தை தரும்.

Updated On 30 Jan 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story