2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சை குறையுங்கள். பிறருக்கு பணம் கொடுப்பதில் நிதானமாக இருங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. கல்வியில் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். அதில் தடைகள் இருக்கிறது. புதிதாக ஏதும் திட்டமிடாதீர்கள். அவசரம், அவசியம் இருந்தால் ஒழிய பயணம் செய்யாதீர்கள். நீங்கள் நம்பியவர்களால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள், உறவுகளால் நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஆகிய அனைத்தும் உண்டு. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம். பெரிதாக லாபம் வருவது போன்ற தோற்றம். ஆனால், லாபம் இல்லை. பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். பிறருக்கு பணம் கொடுப்பதை தவிருங்கள். வேலையை பொறுத்தவரை சுமார். வேலையில் வருமானம், சம்பாத்தியம் இருப்பது போலவே பிரச்சினைகளும் இருக்கின்றன. தொழில் சுமாராக இருப்பதால் முதலீடு வேண்டாம். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Feb 2025 5:09 PM IST
ராணி

ராணி

Next Story