2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். சாதகமான பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உறவுகள் மற்றும் இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மை என்பது இருக்கிறது. பேச நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாக இருங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். வேலை நன்றாக உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். நேரடியான, மறைமுகமான எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானையும், தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 15 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story