2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் நிறைய இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு, இரண்டாம் திருமணம் நடப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. எந்த தொழில் செய்தாலும் பரவாயில்லாமல் இருக்கிறது. நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, உறவுகளால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் என அத்தனையும் இந்த வாரம் உண்டு. நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. நிறைய தேடுதல் இருக்கும். தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டாகும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தஸ்து கூடும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் முழுவதும் முருகன் வழிபாடு மற்றும் நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 8 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story