2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசிநாதன் 3-ஆம் இடத்தில் குருவின் நட்சத்திரத்தில் இருக்கிறார். அப்படி இருப்பது முழுக்க நமக்கு நன்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வாரத்தில் வீடு, இடமாற்றம் உண்டு. விற்க முடியாமல் இருந்த சொத்து நிச்சயமாக விற்பனையாகும். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் நன்மையாக வரும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடு பரவாயில்லை. தொழில் நன்றாக உள்ளது. தொழிலில் எந்த அளவுக்கு முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு ரிட்டன்ஸ் கிடைக்கும். கையில் பணம், தனம், பொருள் இருக்கும். தேவையில்லாதவற்றில் தலையிடாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தாயாரை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, துர்கையின் தரிசனம் அவசியம்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story