2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம், தனம், இருப்பு ஆகியவை இருக்கும். வீடு, இடம் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு உங்கள் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். வேலையை பொறுத்தவரை சும்மா இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எந்த துறையில் பணியாற்றினாலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம், முன்னேற்றம் இருக்கிறது. பெரிய அளவில் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் விடுபடுவதற்கு, ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் பரவாயில்லை. புதிய காதல் மலரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், மியூச்சுவல் ஃபண்ட, டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.
